வெள்ளி, 18 மே, 2012

உங்களுக்கு காதல பிடிக்காதா சரி -கவிதை ???????பிடிக்கவில்லை என்றாலும் இதை படித்து பார்இதை படித்தால் காதலும் பிடிக்கும் -கவிதையும் பிடிக்கும்

உன்னைச் சுற்றிஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்விளங்கும்....
உனக்கும்கவிதை வரும்......
கையெழுத்துஅழகாகும்.....
தபால்காரன்தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தேகண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !

***தலையணை நனைப்பாய்மூன்று முறைபல்துலக்குவாய்...
காத்திருந்தால்நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னைகவனிக்காதுஆனால்...
இந்த உலகமேஉன்னை கவனிப்பதாய்உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்உருவமில்லா 
உருண்டையொன்றுஉருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்திஇந்த பூமி 
இந்த பூக்கள்எல்லாம்காதலை 
கவுரவிக்கும்ஏற்பாடுகள்என்பாய்காதலித்துப் பார்!

***இருதயம் அடிக்கடிஇடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்உனது குரல் மட்டும்ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றிஉனக்குள்ளேஅம்புவிடும்...
காதலின்திரைச்சீலையைக்காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்நைல் நதியாய்ப்பெருக்கெடுக்கும்உதடுகள் மட்டும்சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகுகண்ணீர்த் துளிக்குள்சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

***சின்ன சின்ன பரிசுகளில்சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்புலன்களை வருத்திப்புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்பெண் என்ற சொல்லுக்கும்அகராதியில் ஏறாதஅர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டேசாகவும் 
முடியுமேசெத்துக் கொண்டேவாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...காதலித்துப் பார்!

சனி, 14 ஜனவரி, 2012

பொங்கல் வாழ்த்துக்கள்



பழையன கலைந்து
புதியன அணிய
வந்திடும் திருநாளாம்
தைப்பொங்கல்.

வேர்வையினை உழைப்பாக்கி
நம் உண்ண உணவளிக்கும்
உழவனுக்கு விழா எடுக்கும்
பெருநாளாம் இன்று..

பூமியின் அசைவுக்கு மட்டுமன்றி
மனித மனங்களின்
இருளை போக்க
உதித்திடும் சூரிய தேவனுக்கு
நமஸ்காரம் செலுத்திடும்
திருநாள் இன்று

பானைகளில் பொங்கிடும்
நுரை போல
மனித மனங்களில் என்றும்
இன்பம் பொங்கி வழிந்திட
தமிழர் தாயகமெங்கும்
செழுமை பொங்கிட
வாழ்த்துகின்றேன் நானும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

வெள்ளி, 6 ஜனவரி, 2012

ஜீவாவிற்கு வாழ்த்து தெரிவித்த சிம்பு


தமிழ் திரையுலகில் நண்பனின் முன்னோட்டக் காட்சியை பார்த்து விட்டு நடிகர் சிம்பு, நண்பனில் நடிக்காதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் ஆரம்பத்தில் சிம்பு தான் நடிப்பதாக ஒப்பந்தம் ஆனது. ஆனால் பல்வேறு காரணங்களால் சிம்பு படத்திலிருந்து விலகிக் கொள்ள அப்படத்தில் ஜீவா நடித்தார்.
அதன் பின்பு ஜீவா சிம்பு இருவருமே பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசினர். இதனால் இருவரும் எதிரும் புதிருமாகி விட்டனர் என்று ரசிகர்கள் மனதில் கருத்து பரவியது.
இந்நிலையில் சிம்பு தனது டிவிட்டர் இணையத்தில் 'நண்பன்' குறித்து, நண்பன் படத்தின் முன்னோட்ட காட்சிகள் அருமையாக இருக்கிறது. நண்பன் படத்தில் நடிக்காதது குறித்து வருத்தம் அடைகிறேன்.
ஷங்கர் சார் மற்றும் விஜய் அண்ணா இருவரோடும் பணியாற்றும் வாய்ப்பை தவறியதில் வருத்தம். ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் இருவருமே அழகாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு நேற்று முன்தினம்(4.1.2012) ஜீவாவின் பிறந்தநாள் அன்று டிவிட்டர் இணையத்தில் சிம்பு, பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதர்.. 'நண்பன்' முன்னோட்ட காட்சிகள் அருமையாக இருக்கிறது. நீங்கள் சுப்பராக இருக்கிறீர்கள். படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
சிம்புவின் பிறந்தநாள் வாழ்த்துக்கு ஜீவா, வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கு முன்னோட்ட காட்சி பிடித்து இருப்பதில் மகிழ்ச்சி. விரைவில் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

கடி ஜோக்ஸ்


1) தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?
ஆபீஸ்லியா வீட்டிலியா...?
2) தாத்தா.. இனிமே கம்ப்யூட்டர் படிச்சாத்தான் வேலை கிடைக்கும்.
அப்ப நீ படிச்சா கிடைக்காதா?
3) ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?
அது வாயில்லா பிராணி சார்...!
4) மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.

தோப்புக்கரணம் ஒரு சுவாரஸ்யமான தகவல்


ஒரு சுவாரஸ்யமான தகவல். நாம் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இபிள்ளையார் ந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? Los Angelsஐ  சேர்ந்த மருத்துவர் Dr.Eric Robins இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார்.
அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக் கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார். தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியால் தீர்வு காண முடியும் என ஆராய்ச்சியாளர்கள் 

2011 இன் சிறந்த இணையத்தளம்


2011 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் பத்து இணையதளங்கள் பற்றி காண்போம். பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது அல்ல. Online-ல் பொருட்களை வாங்க உதவும் அமேசான் தளம் தான் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் இணையதளமாகும்.
இந்த தளம் Online-ல் பொருட்களை வாங்க உதவும் தளமாகும். கூகுளிடம் ஒப்பிடுகையில் இந்த தளத்தின் வாசகர் வரத்து குறைவு தான். ஆனால் பொருட்களை வாங்க மொத்த சந்தையாக இந்த தளம் உள்ளதால் தான் கூகுளை காட்டிலும் அதிகம் சம்பாதிக்கிறது.

உன்புருஷன் என்றதில்....!



அன்பே உனைக் கண்ட முதல் நாளே - ஏன்
முன்பே உனைக் காணவில்லை என துடித்தேன்
பெண்மை அது நேர்மை இன்மை என்றிருந்தேன் - ஆனால்
உண்மை நானறிந்தேன் உனைக் கண்ட பின்பே!
அன்பே பெண்ணின் அழகென்று உணர்ந்தேன்
அதனை உன்னன்பில் நானின்று கண்டேன்
நட்பில் உன் கற்பை வியந்தேன் - அதனால்
தப்பேது தெய்வமாய் நீ உயர்ந்தால் !!
அன்பாய் அழகாய் ஒரு பெண்ணைக் கொண்டேன்
அருளாய் இறை எனக்களித்த செல்வமே - எனக்கு
குருவாய் வந்த குழந்தையே - நீ எந்தன்
ஒருதாய் என்றிருக்க கண்டேன்!!!
என்றென்றும் நீ வேண்டும் மானே - நீ
என்றில்லையானால் அன்றே பிரியணும் என்னுயிர் தானே
உன்புருஷன் என்றதில் தானே - நான்
அன்றலர்ந்த செந்தாமரை யானேன்!!!