ஞாயிறு, 1 ஜனவரி, 2012

உன்புருஷன் என்றதில்....!



அன்பே உனைக் கண்ட முதல் நாளே - ஏன்
முன்பே உனைக் காணவில்லை என துடித்தேன்
பெண்மை அது நேர்மை இன்மை என்றிருந்தேன் - ஆனால்
உண்மை நானறிந்தேன் உனைக் கண்ட பின்பே!
அன்பே பெண்ணின் அழகென்று உணர்ந்தேன்
அதனை உன்னன்பில் நானின்று கண்டேன்
நட்பில் உன் கற்பை வியந்தேன் - அதனால்
தப்பேது தெய்வமாய் நீ உயர்ந்தால் !!
அன்பாய் அழகாய் ஒரு பெண்ணைக் கொண்டேன்
அருளாய் இறை எனக்களித்த செல்வமே - எனக்கு
குருவாய் வந்த குழந்தையே - நீ எந்தன்
ஒருதாய் என்றிருக்க கண்டேன்!!!
என்றென்றும் நீ வேண்டும் மானே - நீ
என்றில்லையானால் அன்றே பிரியணும் என்னுயிர் தானே
உன்புருஷன் என்றதில் தானே - நான்
அன்றலர்ந்த செந்தாமரை யானேன்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக