சனி, 31 டிசம்பர், 2011

மெல்போர்ன் டெஸ்டில் அவுஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோற்றது குறித்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன.
பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இந்திய அணியை, மைக்கேல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி அடிபணிய வைத்து ஆச்சரியமளித்துவிட்டது என்றும் கூறியுள்ளன.
"தி டெய்லி டெலிகிராப்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "பலம் வாய்ந்த வரிசையைக் வரிசையைக் கொண்ட இந்திய அணியின் துடுப்பாட்டம் இப்போது பலவீனமாகியுள்ளது என்பதை தோனியே ஒப்புக்கொண்டுள்ளார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் தாங்கள் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டிருக்கிறது. இதனால் அவர்களுக்கு இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சச்சின் இன்னும் 100-வது சதமடிக்கவில்லை. 100-வது சதத்தை மீண்டும் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயம் அவருக்கு உள்ளது. பிராட்மேன் விளையாடியபோது அவர் ஆட்டமிழந்தால் அதுதான் பத்திரிகை போஸ்டர்களில் முக்கிய இடம்பிடித்தது. "ஹி இஸ் அவுட்' என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் மெல்போர்ன் டெஸ்டில் சச்சின் ஆட்டமிழந்தபோது "இட்ஸ் ஓவர்' என துணைத் தலைப்பிலேயே பத்திரிகைகள் முடித்துவிட்டன.
சச்சின் 100-வது சதத்தை நிறைவு செய்யாவிட்டாலும், அவர் மைதானத்தை விட்டு வெளியேறியபோது பாராட்டுக்கு குறைவில்லை ' என்று கூறியுள்ளது. "மெதுவான ஆடுகளமான இந்திய ஆடுகளங்களில் மட்டுமே இந்திய அணியால் எளிதாக ரன் குவிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது' என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
"சச்சின் டெண்டுல்கர் ஒருவர் மட்டுமே அர்த்தமுள்ள ஆட்டத்தை ஆடினார். அவருக்கு 38 வயது என்றாலும், இளம் வீரரைப் போன்று அற்புதமாக விளையாடினார். மற்ற வீரர்களின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. சச்சின் மட்டும் களத்தில் இருந்திருந்தால் 100-வது சதம் மட்டுமல்ல, வெற்றியும் சாத்தியமாகியிருக்கலாம்' என்று "சிட்னி மார்னிங் ஹெரால்டு' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வெற்றிபெற்றுள்ள அவுஸ்திரேலிய அணியை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏராளமான ஊடகங்கள் வெகுவாகப் புகழ்ந்து தள்ளியிருக்கின்றன.

2011ம் ஆண்டில் கொலைவெறி தான் டாப்



நடிகர் தனுஷ் எழுதிப் பாடிய ஒய் திஸ் கொல வெறிடி பாடலை 2011-ன் சிறந்த பாடலாக பிரபல சி.என்.என் தொலைக்காட்சி தெரிவு செய்துள்ளது.
யுட்யூபின் கோல்ட் விருது, டைம் இதழில் கவுரவம், பிரதமருடன் விருந்து சாப்பிடும் பெருமை என அடுத்தடுத்து கொலை வெறி டி பாடலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சி.என்.என் தொலைக்காட்சியின் 2011-ன் டாப் பாடல் என்ற பாராட்டையும் இந்தப் பாடல் பெற்றுள்ளது.
இந்தப் பெருமையைப் பெறும் முதல் தமிழ் பாடல் இது தான் என்பது கூடுதல் பெறுமை.
இதற்கிடயே பிரதமரின் விருந்தில் நேற்று முன்தினம் பங்கேற்ற தனுஷ் இன்று சென்னை திரும்பியுள்ளார்.
இந்த ஆண்டு தனது புத்தாண்டு தினத்தை பெற்றோர் மற்றும் மாமனார் ரஜினியின் ஆசியுடன் தொடங்குவேன் என்று கூறிய தனுஷ் அன்றைய தினம் தன் மனைவி ஐஸ்வர்யா பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள்



2011-ம் ஆண்டு தமிழ் படங்களில் இளம் கதாநாயகிகளின் ஆதிக்கம் பலமாக உள்ளது.
முன்னணி நடிகைகளாக இருந்த நயன்தாரா, திரிஷா, சினேகா, ஸ்ரேயா, தமன்னா போன்றவர்கள் பின்தங்கியுள்ளனர். நயன்தாரா திருமணத்துக்கு தயாராகி நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். நடிகை திரிஷா தெலுங்கில் கவனம் செலுத்தியுள்ளார்.
அனுஷ்கா, அமலாபால், ஹன்சிகா, அஞ்சலி, காஜல் அகர்வால் என பல புது நாயகிகள் இவ்வாண்டில் கலக்கினார்கள். அனுஷ்கா வானம், தெய்வத்திருமகள் படங்களில் வந்தார். ரஜினி, கமலுக்கு ஜோடியாகும் வாய்ப்பும் இவரை நெருங்குகிறது.
முன்னணி கதாநாயகர்களும் அனுஷ்காவுடன் நடிக்க விரும்புகிறார்கள். சுராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாகவும், செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா ஜோடியாகவும், தாண்டவம் படத்தில் விக்ரம் ஜோடியாகவும் தற்போது நடித்து வருகிறார்.
நடிகை ஹன்சிகா மாப்பிள்ளை படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார். பின்னர் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் படங்களில் நடித்து முன்னணி நடிகை பட்டியலில் இருக்கிறார். சிம்புவுடன் வேட்டை மன்னன், உதயநிதி ஸ்டாலினுடன் “ஒரு கல் ஒரு கண்ணாடி” படங்கள் கைவசம் உள்ளன.
நடிகை அமலாபாலுக்கு தெய்வத் திருமகள் படம் திருப்பு முனையாக அமைந்தது. மாதவன், ஆர்யாவுடன் வேட்டை, பழைய நடிகர் முரளியின் மகன் அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகை டாப்ஸி ஆடுகளம், வந்தான் வென்றான், என இருபடங்களில் நடித்தார்.
நடிகை காஜல் அகர்வாலுக்கு இவ்வாண்டில் படங்கள் இல்லை. ஆனாலும் பெரிய நடிகர்களான ஆர்யா ஜோடியாக மாற்றான், விஜய் ஜோடியாக துப்பாக்கி படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை லட்சுமிராய், மெகா ஹிட்டான படங்களான காஞ்சனா, மங்காத்தா படங்களில் வந்தார். ஸ்ரேயாவுக்கு ரௌத்திரத்துக்கு பிறகு படங்கள் இல்லை.
சிறுத்தை, வேங்கை படங்களுக்கு பிறகு தமன்னாவிடம் தமிழ் படங்கள் இல்லை. ஸ்ருதி, 7ஆம் அறிவு படம் மூலம் பேசப்பட்டார். தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக '3' படத்தில் நடிக்கிறார்.
அஞ்சலி, கார்த்திகா, அனன்யா, ரிச்சா, ஓவியா, 'கோ'வில் வந்த கார்த்திகா போன்றோரும் 2011-ல் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்களாக இருந்தனர்.
Image by FlamingText.com

ரசனைகளை இழந்து விடாதீர்கள்!

வாழ்க்கை நம்மை உருட்டிக் கொண்டே செல்கையில் எத்தனையோ உன்னதமான தன்மைகளை நாம் சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம். குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் இருந்த எத்தனையோ ரசனைகள் சொல்லாமலேயே நம்மிடமிருந்து விடைபெற்று விடுகின்றன. ஒரு காலத்தில் மனதைக் கொள்ளை கொண்ட இயற்கைக் காட்சிகளும், அழகான பாடல்களும் காலப் போக்கில் நம்மில் பெரும்பாலோரால் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை. ஏதோ பழைய நினைவுகளாக மட்டுமே அவை தங்கி விடுவது தான் பெரிய சோகம். அந்த ரசனைகளை இழக்கின்ற போது வாழ்க்கையின் அழகையும் சேர்ந்து நாம் இழந்து விடுகின்றோம் என்பதை நம்மில் கணிசமானோர் உணரத் தவறி விடுகிறோம். 

ரசித்த ஒரு தேர்வுத்தாள் நகைச்சுவை...

கடி





”என் காதல் மழை மாதிரி ரொம்ப அழகானது டா”

அப்ப  சீக்கிரம் நீ டாக்டர பார்க்க வேண்டி வரும்!


என்ன சொல்ற?


மழையில நனைஞ்சா ஜல தோஷம் பிடிச்சிடுமே உனக்கு.!!!

ஜோக்

கவிதை

என் முதல் கவிதைகள்
ஒரு குயர் ரூல்டு நோட்டில்
எழுதித் தீர்க்கப்பட்டபின்
முதல் காதலிக்கு சமர்ப்பணம்
செய்து அவளிடமே நீட்டிவிட்டேன்

என் இரண்டாம்கட்ட கவிதைகள்
ஒரு குயர் அன்ரூல்டு நோட்டில்
எழுதித் தீர்க்கப்பட்டபின் 
இரண்டாம் காதலிக்கு சமர்ப்பணம் 
செய்து அவளிடமே நீட்டி விட்டேன்,

பிறகு நான் 
கவிதை எழுதுவதையும் 
விட்டொழிந்து விட்டேன்.

மனைவி வந்த பிறகு
தக்கோளி 1 கிலோ,புளி,
உளுந்தம்பருப்பு,துவரை அரைகிலோ
அஸ்கா ஒரு பாக்கெட் என‌
வெற்றுத்தாள்களில் எனக்கு
கவிதையாய் எழுதி நீட்டுகிறாள்.
வாழ்க்கை கவிதையாய் நகருகிறது.

"உங்கள் காதலிகள் மீது ஏதேனும்
வருத்தங்களுண்டா? என்று
அன்றொரு நாள் கேட்டாள்.
வருத்தம் அவர்கள் மீதல்ல எனக்கு
அந்த ஒரு குயர்
நோட்டுகளின் மீதுதான் என்றேன்.

எனக்கு எப்போது எழுதுவீர்கள்? என்றாள்.
வயிறு உனக்கு புடைக்கிறதே
தெரியவில்லையா? அதுதான் 
உனக்கான என் கவிதை,என்றேன்.

மரணம்

தீவிர சிகிச்சை பெற்ற   2011 அவர்கள் சில மணி நேரத்துக்கு முன்னர் சிகிச்சை பலனளிக்காது 
உயிர் இழந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 2012 வீட்டில் நடைபெறுகிறது.
அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

எனது வாழ்த்துக்கள்



















என்னை படிச்சவங்களுக்கும்....


என்னைய புடிச்சவங்களுக்கும்...


எனக்கு புடிச்சவங்களுக்கும்...

மற்றும் உங்க எல்லாத்துக்கும்....

முக்கியமா உனக்கும்...!

2012 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
கபில்ராஜ் 

நகைச்சுவை


டாக்டர்! என்னை ஒரு வாரம் நல்லா ரெஸ்ட்டுல இருக்கணும்னு சொல்லிட்டாரு!"
அதுக்கு என்னடா செய்யப்போறே?"
என் பொண்டாட்டியை ஒரு வாரத்துக்கு ஊருக்கு அனுப்பி வைக்கப் போறேன்."

பேஸ்புக் / டிவிட்டர் / ப்ளாக் மூலம் பணம் பண்ணுவது எப்படி ?


நீங்க டிவிட்டர் , பேஸ்புக் , அல்லது ப்ளாக் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை உபயோகிப்பவரா ?? அப்படியாயின் இது உங்களுக்கானது தான் வாங்க தொடர்ந்து படிக்கலாம் ...



பொதுவாக சமூக வலைதளங்களில் செய்திகள் / வீடியோ போட்ரவற்றை பகிரும் போது சில இணையத்தளங்களின் முகவரி மிக நீண்டதாக இருப்பின் அதனை சில இணையத் தளம் மூலம் சுருக்கி பதிவர் . உதராணமாக http://tamilwares.blogspot.com/2011/08/blog-post.html என்ற முகவரியை சுருக்கி http://adf.ly/2MgEL அமைத்துள்ளேன் . முகவரி சிறிதாக சுருக்கப் பட்டு இருந்தாலும் அதனை சொடுக்கும் போது தானாக http://tamilwares.blogspot.com/2011/08/blog-post.html முகவரிக்கே வந்து விடும் . இப்போது நாம் இது போன்ற சுருக்கி வெளியிடும் முகவரிகளுக்கு பணம் குடுக்க ஆரம்பித்து விட்டன குறிப்பிட்ட இணையதளங்கள் . ஆம் நாம் விருப்பபட்டால் நாம் சுருக்கி வெளியிடும் முகவரிகள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் . அதற்கு பதிலாக 5 வினாடிகள் ஓர் விளம்பரத்தை நாம் பார்வையிட வேண்டும் . உதாரணமாக http://tamilwares.blogspot.com/2009/10/auto-shutdown.html என்ற இந்த முகவரியை http://adf.ly/2MgQu இவ்வாறு சுருக்கி உள்ளேன் இதனை கிளிக் செய்தால் முதல் 5 வினாடிகள் வேறொரு தளத்தின் பக்கம் தோன்றும் , 5 வினாடிகள் முடிந்த பின்பு மேலே வலது பக்க ஓரத்தில் உள்ள skip ad என்னும் option ஐ அழுத்தி விட்டால் போதும் நாம் பார்க்க வேண்டிய உண்மையான தளத்திற்குச் செல்லும் . http://adf.ly/2MgQu இந்த முகவரியை அழுத்தி சோதித்துப் பார்க்கவும் .

எனி பெண்கள் வேண்டாம் ??????

என்னங்க மேல உள்ள தலைப்ப பாத்ததும் சும்மா கதை விடறேன்னு நினைத்து விட்டீர்களா ?? அது தான் இல்லை , இப்போது புதிதாக வந்திருக்கும் iphone 4s இல் siri என்னும் பேசும் பெண்ணைப் பற்றித் தான் ஊரெல்லாம் பேச்சு , ஆனால் இந்த மென்பொருள் எப்போதோ அண்ட்ராய்ட் கைபேசியில் வந்து விட்டது , அண்ட்ராய்ட் பற்றி மேலும் தெரிந்து கொள்ள . இது ஒரு பேசும் பெண் நீங்கள் கேட்கும் அனைத்து விதமான கேள்விக்கும் எளிதாகப் பதில் அளிக்கும் ,
உங்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து குடுக்கும்.

Read more: தமிழில் மென்பொருள் - www.tamilwares.blogspot.com 

காற்பந்தில் இந்தியாவின் நிலை

  பிபா தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து 132வது இடத்தில் உள்ளது.
 'பிபா' தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நிலையில் எந்த வித மாற்றமும் இல்லை.கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையில் நடந்த ஏ.எப்.சி.சாலஞ்சர் கோப்பை போட்டியில் 23வயதுக்குட்பட்ட இந்திய அணியே பங்கேற்றது. எனவே அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்திய சீனியர் அணி எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்காததால் தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை.தொடர்ந்து இந்தியா 132வது இடத்திலேயே உள்ளது.ஆசிய அளவில் இந்திய அணி 22வது இடத்தில் உள்ளது.
 ஆசிய கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் போர்ச்சுகல் நாட்டில் உள்ள லிஸ்பன் ஸ்போர்ட்டிங் அகாடமியில் ஜுன் முதல் 4 மாத காலம் பயிற்சி பெறுகின்றனர். பயிற்சிக்கு முடிந்த பிறகு செப்டம்பர் மாத இறுதியில்தான் இந்திய அணி அடுத்த சர்வதேச ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டுள்ளது.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

சிம்புவின் திறமை

பிரபல பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக்கலைஞர் ரிஹானா ஆகியோருடன் இணைந்து உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் நடிகர் சிம்பு.
இதுவரை லூசுப்பெண்ணே... எவன்டி உன்ன பெத்தான் போன்ற பாடல்களை எழுதி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பும், பெண்கள் மத்தியில் அதிருப்தியையும் சம்பாதித்து கொண்ட சிம்பு, பெண்களையும் திருப்திபடுத்தும் விதமாக, சமீபத்தில் ஒஸ்தி படத்தில் பொண்டாட்டி பாடலை எழுதினார்.
இந்தபாடலை கேட்டு பலரும் தங்களுக்கு வரப்போகிற கணவர் இப்படி இருக்கமாட்டாரா...என்று பெண்களை ஏங்க வைத்தார். இந்நிலையில் இப்போது எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபடி மேலே போய், உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
பிரபல அமெரிக்க பாப் பாடகர் ஏகான் மற்றும் ராப் இசைக் கலைஞர் ரிஹானா ஆகியோருடன் சேர்ந்து இந்த பாடலை உருவாக்கிறார் சிம்பு. 96 மொழிகளில் காதல் என்று பொருள்படும் வார்த்தைகளை இப்பாடலில் பயன்படுத்தி இருக்கிறார் சிம்பு.
96 மொழிகளையும், பல கோடி மக்களையும் இணைக்க, தடைகளை உடைத்து, அனைவரும் உடையாத பந்தங்களாக.. இதோ உலக அமைதிக்காக ஒரு இந்தியனின் சிறு பங்களிப்பு என்று சிம்பு சொல்லியிருக்கிறார்.
மேலும் அன்புக்கான பாடலாக, உலகத்தின் அன்பு கீதமாக இந்த பாடல் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.நேற்று வெளியான இப்பாடல், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் தனுஷின் கொலவெறி பாடல், அவரை பிரதமர் விருந்தில் பங்கேற்கும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியுள்ளது. இதனால் புகழின் உச்சியில் இருக்கிறார் தனுஷ்.
அதேபோல் சிம்புவும், தனுஷூக்கு நிகராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சி தான், இந்த உலக அமைதி பாடல் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

விஜயின் கெட்டப் மாற்றம்


துப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் தன்னை மாற்றிக் கொள்ளப் போகிறாராம் நடிகர் விஜய்.
எல்லா படத்திலும் ஒரே கெட்டப்பில் நடிக்கும் நடிகர் என்ற பெயர் விஜய்க்கு உண்டு. விஜய்யும், கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர்.
வசீகரா படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார்.
காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டும் மாற்றியுள்ளார். மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.
இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் துப்பாக்கி படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளாராம் விஜய். இந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்கு கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறார்.
படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குனருக்கு ஒத்துழைத்து வருகிறாராம். மும்பையில் விறுவிறுப்பாக இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது.
இந்தப் படம் முடிந்த கையோடு கவுதம் மேனன் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்.