ஞாயிறு, 1 ஜனவரி, 2012

நண்பன் இசை வெளியீட்டு விழா: இலியானா விளக்கம்


தெரிவித்து
தமிழ் திரையுலகில் நண்பன் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்காத காரணத்தை இலியானா தெரிவித்துள்ளார்.
திரையுலக நாயகி இலியானா தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் திரைப்படமே தோல்வியைத் தழுவ, தெலுங்கு திரையுலகிற்கு சென்று விட்டார்.
தற்போது தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிற இலியானா இளைய தளபதி விஜய்யுடன் நண்பனுடன் இணைந்துள்ளார்.
சமீபத்தில் நண்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழகத்தின் கோயம்புத்தூரில் நடந்து முடிந்தது. இயக்குனர் ஷங்கர், நண்பன் நாயகன்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், அனுயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால் நண்பனின் நாயகியான இலியானாவை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தும் அவரால் கலந்து கொள்ளமுடியவில்லை.
இதுபற்றி இலியானா கூறியதாவது, நண்பன் இசைவெளியீட்டு விழா அன்று எனக்கு கடுமையான காய்ச்சல். ஆகவே என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று 
ள்ளார்.

சனி, 31 டிசம்பர், 2011

மெல்போர்ன் டெஸ்டில் அவுஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோற்றது குறித்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன.
பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இந்திய அணியை, மைக்கேல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி அடிபணிய வைத்து ஆச்சரியமளித்துவிட்டது என்றும் கூறியுள்ளன.
"தி டெய்லி டெலிகிராப்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "பலம் வாய்ந்த வரிசையைக் வரிசையைக் கொண்ட இந்திய அணியின் துடுப்பாட்டம் இப்போது பலவீனமாகியுள்ளது என்பதை தோனியே ஒப்புக்கொண்டுள்ளார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் தாங்கள் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டிருக்கிறது. இதனால் அவர்களுக்கு இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சச்சின் இன்னும் 100-வது சதமடிக்கவில்லை. 100-வது சதத்தை மீண்டும் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயம் அவருக்கு உள்ளது. பிராட்மேன் விளையாடியபோது அவர் ஆட்டமிழந்தால் அதுதான் பத்திரிகை போஸ்டர்களில் முக்கிய இடம்பிடித்தது. "ஹி இஸ் அவுட்' என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் மெல்போர்ன் டெஸ்டில் சச்சின் ஆட்டமிழந்தபோது "இட்ஸ் ஓவர்' என துணைத் தலைப்பிலேயே பத்திரிகைகள் முடித்துவிட்டன.
சச்சின் 100-வது சதத்தை நிறைவு செய்யாவிட்டாலும், அவர் மைதானத்தை விட்டு வெளியேறியபோது பாராட்டுக்கு குறைவில்லை ' என்று கூறியுள்ளது. "மெதுவான ஆடுகளமான இந்திய ஆடுகளங்களில் மட்டுமே இந்திய அணியால் எளிதாக ரன் குவிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது' என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
"சச்சின் டெண்டுல்கர் ஒருவர் மட்டுமே அர்த்தமுள்ள ஆட்டத்தை ஆடினார். அவருக்கு 38 வயது என்றாலும், இளம் வீரரைப் போன்று அற்புதமாக விளையாடினார். மற்ற வீரர்களின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. சச்சின் மட்டும் களத்தில் இருந்திருந்தால் 100-வது சதம் மட்டுமல்ல, வெற்றியும் சாத்தியமாகியிருக்கலாம்' என்று "சிட்னி மார்னிங் ஹெரால்டு' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வெற்றிபெற்றுள்ள அவுஸ்திரேலிய அணியை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏராளமான ஊடகங்கள் வெகுவாகப் புகழ்ந்து தள்ளியிருக்கின்றன.

2011ம் ஆண்டில் கொலைவெறி தான் டாப்



நடிகர் தனுஷ் எழுதிப் பாடிய ஒய் திஸ் கொல வெறிடி பாடலை 2011-ன் சிறந்த பாடலாக பிரபல சி.என்.என் தொலைக்காட்சி தெரிவு செய்துள்ளது.
யுட்யூபின் கோல்ட் விருது, டைம் இதழில் கவுரவம், பிரதமருடன் விருந்து சாப்பிடும் பெருமை என அடுத்தடுத்து கொலை வெறி டி பாடலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சி.என்.என் தொலைக்காட்சியின் 2011-ன் டாப் பாடல் என்ற பாராட்டையும் இந்தப் பாடல் பெற்றுள்ளது.
இந்தப் பெருமையைப் பெறும் முதல் தமிழ் பாடல் இது தான் என்பது கூடுதல் பெறுமை.
இதற்கிடயே பிரதமரின் விருந்தில் நேற்று முன்தினம் பங்கேற்ற தனுஷ் இன்று சென்னை திரும்பியுள்ளார்.
இந்த ஆண்டு தனது புத்தாண்டு தினத்தை பெற்றோர் மற்றும் மாமனார் ரஜினியின் ஆசியுடன் தொடங்குவேன் என்று கூறிய தனுஷ் அன்றைய தினம் தன் மனைவி ஐஸ்வர்யா பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள்



2011-ம் ஆண்டு தமிழ் படங்களில் இளம் கதாநாயகிகளின் ஆதிக்கம் பலமாக உள்ளது.
முன்னணி நடிகைகளாக இருந்த நயன்தாரா, திரிஷா, சினேகா, ஸ்ரேயா, தமன்னா போன்றவர்கள் பின்தங்கியுள்ளனர். நயன்தாரா திருமணத்துக்கு தயாராகி நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். நடிகை திரிஷா தெலுங்கில் கவனம் செலுத்தியுள்ளார்.
அனுஷ்கா, அமலாபால், ஹன்சிகா, அஞ்சலி, காஜல் அகர்வால் என பல புது நாயகிகள் இவ்வாண்டில் கலக்கினார்கள். அனுஷ்கா வானம், தெய்வத்திருமகள் படங்களில் வந்தார். ரஜினி, கமலுக்கு ஜோடியாகும் வாய்ப்பும் இவரை நெருங்குகிறது.
முன்னணி கதாநாயகர்களும் அனுஷ்காவுடன் நடிக்க விரும்புகிறார்கள். சுராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாகவும், செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா ஜோடியாகவும், தாண்டவம் படத்தில் விக்ரம் ஜோடியாகவும் தற்போது நடித்து வருகிறார்.
நடிகை ஹன்சிகா மாப்பிள்ளை படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார். பின்னர் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் படங்களில் நடித்து முன்னணி நடிகை பட்டியலில் இருக்கிறார். சிம்புவுடன் வேட்டை மன்னன், உதயநிதி ஸ்டாலினுடன் “ஒரு கல் ஒரு கண்ணாடி” படங்கள் கைவசம் உள்ளன.
நடிகை அமலாபாலுக்கு தெய்வத் திருமகள் படம் திருப்பு முனையாக அமைந்தது. மாதவன், ஆர்யாவுடன் வேட்டை, பழைய நடிகர் முரளியின் மகன் அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகை டாப்ஸி ஆடுகளம், வந்தான் வென்றான், என இருபடங்களில் நடித்தார்.
நடிகை காஜல் அகர்வாலுக்கு இவ்வாண்டில் படங்கள் இல்லை. ஆனாலும் பெரிய நடிகர்களான ஆர்யா ஜோடியாக மாற்றான், விஜய் ஜோடியாக துப்பாக்கி படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை லட்சுமிராய், மெகா ஹிட்டான படங்களான காஞ்சனா, மங்காத்தா படங்களில் வந்தார். ஸ்ரேயாவுக்கு ரௌத்திரத்துக்கு பிறகு படங்கள் இல்லை.
சிறுத்தை, வேங்கை படங்களுக்கு பிறகு தமன்னாவிடம் தமிழ் படங்கள் இல்லை. ஸ்ருதி, 7ஆம் அறிவு படம் மூலம் பேசப்பட்டார். தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக '3' படத்தில் நடிக்கிறார்.
அஞ்சலி, கார்த்திகா, அனன்யா, ரிச்சா, ஓவியா, 'கோ'வில் வந்த கார்த்திகா போன்றோரும் 2011-ல் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்களாக இருந்தனர்.
Image by FlamingText.com

ரசனைகளை இழந்து விடாதீர்கள்!

வாழ்க்கை நம்மை உருட்டிக் கொண்டே செல்கையில் எத்தனையோ உன்னதமான தன்மைகளை நாம் சிறிது சிறிதாக இழந்து விடுகிறோம். குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும் இருந்த எத்தனையோ ரசனைகள் சொல்லாமலேயே நம்மிடமிருந்து விடைபெற்று விடுகின்றன. ஒரு காலத்தில் மனதைக் கொள்ளை கொண்ட இயற்கைக் காட்சிகளும், அழகான பாடல்களும் காலப் போக்கில் நம்மில் பெரும்பாலோரால் பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை. ஏதோ பழைய நினைவுகளாக மட்டுமே அவை தங்கி விடுவது தான் பெரிய சோகம். அந்த ரசனைகளை இழக்கின்ற போது வாழ்க்கையின் அழகையும் சேர்ந்து நாம் இழந்து விடுகின்றோம் என்பதை நம்மில் கணிசமானோர் உணரத் தவறி விடுகிறோம். 

ரசித்த ஒரு தேர்வுத்தாள் நகைச்சுவை...